தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

16 December 2020

2020, டிசம்பர் மாதக்கூட்டம்

 







 12-12-2020, மாதத்தின் இரண்டாவது 
சனிக்கிழமையன்று 
 காலை 10:30 மணிக்கு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு மாவட்டத் துணைத்தலைவர்  எம். ஜீவானந்தம் அவர்கள் தலைமையேற்றுக் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். 

மாநில துணைத் தலைவர் என்.அம்பிகாபதி, மாவட்டச் செயலர் திரு.எஸ். சுப்பையா, இணைச் செயலர் எம்.பர்னபாஸ் மற்றும் கே.சித்திக் உமர், பொருளாளர் எஸ்.பால்சாமி ஆகியோர் பங்கேற்றுத் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். 

கூட்டத்தில் கீழ்கண்டவை குறித்த விவாதங்கள் நடந்தேறின: 

1.  17-12-2020 அன்று ஓய்வூதியர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடுவது

2.  70 அகவை நிறைவு செய்த ஒன்பது தோழர்களைக் கௌரவிப்பது. 

3.  VRSன் காரணமாக ஓய்வு பெற்றுச் சங்கத்தில் இணைந்துள்ள புதிய தோழர்களைக் கௌரவிப்பது. 

விவாதங்களில் அனைத்துத் தோழர்களும் சிறப்பாகப் பங்கேற்றனர். 

கூட்டத்தில் 30 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.