தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

21 March 2019

கொறுக்கைப் பள்ளி மாணவியின் "நன்றி கவிதை"

கொறுக்கை நடு நிலைப்பள்ளி தமிழ் மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி மாநில AIBSNLPWA  சங்கங்களின் கூட்டு முயற்சியால் சீரமைக்கப்பட்டு பள்ளி நிர்வாகத்திடம் கடந்த ஞாயிறு  (17 03-2019 ) அன்று ஒப்படைக்கப்பட்டது.

நன்றிப் பெருக்கால் நெகிழ்ந்து போன பள்ளி மாணவ மாணவிகள்  பாடல் மூலமாகவும் கவிதை மூலமாகவும் தெரிவித்து மகிழ்ந்தனர் . எட்டாவது வகுப்பில் பயிலும் மாணவி ஜெனிதா அளித்த கவிதையினை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.

ஓய்வூதியர் நலம் மட்டுமல்ல சமூக நலத்திலும் நாம் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம்.